முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - திமுக எம்.பி.ரமேஷூக்கு ஜாமீன்

வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:35 IST)
முந்திரி ஆலை கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷ் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முந்திரி தோட்ட தொழிலாளி மர்மமான முறையில் கொலையான நிலையில் இந்த கொலையை திமுக எம்பி ரமேஷ் உடந்தையால் தான் செய்யப்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது 
 
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் முந்திரி ஆலை கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்