ஈயாடிய தேமுதிக அலுவலகம்… வைரலாகும் புகைப்படம்!

புதன், 10 மார்ச் 2021 (15:04 IST)
தேமுதிக அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இவர்கள் கேட்பதும் அவர்கள் கொடுப்பதாக சொல்வதுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் அதிமுக டெபாசிட் கூட ஒரு தொகுதியிலும் வாங்காது என தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இப்போது திமுகவுடன் கூட்டணியா அல்லது அமமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வி தேமுதிக முன் உள்ளது. ஆனால் விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோரின் பேச்சுகள் தனியாக நிற்கக் கூட தேமுதிக தயாராக உள்ளது என்பது போல உள்ளது. அவர்களுக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு இல்லை என்பது போல தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலாவது குறிப்பிட்ட சீட்களையும் தேர்தல் செலவுக்கு ஒரு அமௌண்ட்டை வாங்கி தேர்தல் செலவு செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில் தேமுதிக கூட்டணியை விட்டு வந்ததால் பலரும் நம்பிக்கை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கட்சி அலுவலகம் கூட இன்று வெறிச்சோடி போய் ஆளில்லாமல் காணப்படுகிறது. இது தொடர்பான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்