தமிழ்நாட்டின் 2வது தலைநகர் திருச்சி?

புதன், 23 ஜூன் 2021 (14:00 IST)
திருச்சியை தமிழ்நாட்டின் 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளார் திருச்சி கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ.

 
ஆம், திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார். தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி அமைந்துள்ளதால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருச்சிக்கு குறைந்த மணிநேர செலவில் சாலை மார்க்கத்திலும், ரயில் மற்றும் விமானம் மூலம் வந்து செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்