மதுரையில் டெங்கு அறிகுறி: மக்கள் பீதி

Arun Prasath

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:31 IST)
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தெரிகிறது. இந்நிலையில் மதுரை பேரையூரில் பஞ்சவர்ணம், சித்ரா ஆகிய இருவரும், கே.புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் டெங்கு அறிகுறியுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் விருதுநகர் காரியாப்பட்டியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண்ணும், திருச்சுழியை சேர்ந்த நாகராஜன் என்பவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னையில் மூவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததாக செய்திகள் வெளியாகின.மேலும் டெங்குவை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்