13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி.. அறிகுறிகளுடன் 51 பேர் சிகிச்சை.. முகாம்கள் அமைப்பு..!

புதன், 4 அக்டோபர் 2023 (11:46 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தஞ்சை கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி டெங்கு அறிகுறிகளுடன் மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவதை அடுத்து தஞ்சை கும்பகோணம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்