இந்த தொகுதியில் அதிமுகவை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் சசிகலா போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடி இது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறும்போது, சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாகவும், சசிகலாவால் பாதிக்கப்பட்ட கட்சியின் சீனியர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.