ஹமூன் புயல் கரையை கடப்பது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

செவ்வாய், 24 அக்டோபர் 2023 (08:11 IST)
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஹமூன் புயல் கரையை கடப்பது எப்போது என்பது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹமூன் புயல் நாளை வங்கதேச கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் எனவும்,  சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவி​ற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ  தொலைவில் நிலைகொண்டுள்ள ஹமூன் புயல் நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கரையை கடக்க வாய்ப்பு என்றும், வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்