கோவை வெடிகுண்டு சம்பவத்தில் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை வரும்: சிபி ராதாகிருஷ்ணன்

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (17:14 IST)
கோவை வெடிகுண்டு சம்பவத்தில் திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை வரும் என சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
 
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையான என்பதில் ஐயமில்லை. ஆனால் போலீசார் இங்கு அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து இருக்கும் நிலை உள்ளது 
 
தமிழக அரசு தீவிரவாத செயல்களை முழுமையாக மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் வித்தாகிவிடும் என்பதை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உணரவேண்டும்
 
கோவையை குறிவைத்து தாக்குதல் நடந்து கொண்டிருப்பதால் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிடும் சூழ்நிலை ஏற்படும்.  மாநில சுயாட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்