இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர் ! கிராம மக்கள் சோகம் !

வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:48 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அருகே உள்ள ஆலம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த  காசி - சரோஜா தம்பதியர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 
மகள்கள் வெளியூர்களீல் உள்ள நிலையில், 2 மகன்களும் வெளிநாடுகளில்  வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் காசி வயது முதிர்ச்சியால் காலமானார். அவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது மனைவி சரோஜாவும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
ஒரு நாளில் தம்பதியர் இறந்தது, அந்தக் கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்