பண்டிகை காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை!

புதன், 29 செப்டம்பர் 2021 (19:37 IST)
பண்டிகை காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்!
 
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால்  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
எனவே திருவிழாக்கள், கூட்டங்கள், மத நிகழ்வுகள் போன்றவை மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்தால்  மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து பின்னர் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என்பதால் முன்னேற்பாடாக இப்போதிலிருந்தே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்