பள்ளி மாணவிகளுக்குக் கொரோனா

செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:36 IST)
இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் பரவிய நிலையில்  தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபயாமுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் அதேபோல்  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8 மாணவிகளுக்கும், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கும்  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில் பள்ளியை சுத்தம் செய்யும் பணிக்காக இங்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு கொரொனா உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்