டிசம்பரில் ஆசிரியர் போட்டித் தேர்வு! – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

வியாழன், 7 ஜூலை 2022 (14:54 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதம் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல ஆசிரியர்கள் ஓய்வுபெற உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் நிரந்தர ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வு டிசம்பரில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்