பிரியாணி சாப்பிட்டதால் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்!

செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:48 IST)
கேரளாவில் உள்ள கல்லூரி மாணவி ஒருவர் பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட நிலையில் திடீரென அந்த பிரியாணியை சாப்பிட அஞ்சுஸ்ரீ என்ற கல்லூரி மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
இதனையடுத்து அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் பிரியாணி கடை மீது பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் அஞ்சுஸ்ரீ பிரேத பரிசோதனையில் அவர் விஷம் சாப்பிட்டு உள்ளதாகவும் பிரியாணியில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்து உள்ளது 
 
மேலும் இளைஞர் ஒருவரை அவர் காதலித்ததாகவும் அவரது காதலன் புற்றுநோயால் சமீபத்தில் உயிர் இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்