கைகள் இழந்த 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த 437 மதிப்பெண்கள்: கைகள் பொருத்த முதல்வர் உத்தரவு..!

வெள்ளி, 19 மே 2023 (20:00 IST)
கைகள் இழந்த  10ஆம் வகுப்பு மாணவன் 437 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் அந்த மாணவனுக்கு கைகள் பொருத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 
 
இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
 
பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.
 
மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்!
 
அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
 
நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்