முதல்வர் அழைப்பை ஏற்றார் ஜனாதிபதி திரெளபதி முர்மு.. ஜூன் 5ல் வருகை தர சம்மதம்..!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (12:49 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜூன் 5ஆம் தேதி சென்னை வர ஜனாதிபதி திரௌபதி அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். 
 
மேலும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவிலும் அவர் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை ஏற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜூன் 5ஆம் தேதி சென்னை வருவதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வழியாக உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்