போதைப்பொருள் ஒழிப்பு: 5 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்..!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (14:52 IST)
போதைப்பொருள் ஒழிப்பிற்காக காவல்துறையில் 5 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவித்துள்ளார்.
 
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு  தினத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெற்ற ஐந்து பேர்களின் பெயர்கள் இதோ:
 
1. கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
 
2.  தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ்
 
3. சேலம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன்
 
4. நாமக்கல் காவல் ஆய்வாளர் முருகன் 
 
5. நாமக்கல் மாவட்ட முதல்நிலை காவலர் குமார் 
 
மேற்கண்ட ஐந்து நபர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்