முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த குவிந்த பணம் எவ்வளவு??

புதன், 6 மே 2020 (12:22 IST)
முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளதாக தகவல்.
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்க உள்ள நிலையில், கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. 
 
கொரோனா பாதிப்பை கையாள தமிழக அரசு மக்களிடம் இருந்து நிதி கோரியிருந்தது. அதன் படி தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்