வாட்டர் பாட்டில் ரூ.100, பால் ரூ.150.. தலைமை செயலாளர் எச்சரிக்கை..!

வியாழன், 7 டிசம்பர் 2023 (06:31 IST)
அத்தியாவசிய பொருட்களான பால் காய்கறிகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்  

புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் கரையை கடந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னும்  பெரும்பாலான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்பு பணியாளர்கள் மக்களை மீட்டு வந்தாலும்  பால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன

 இந்த நிலையில்  அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஒரு சில பகுதிகளில் பால் 150 ரூபாய்க்கும் வாட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருவதாக வெளியான தகவலை அடுத்து தலைமை செயலாளர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்