ஸ்டாலின் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்த முதல்வர் பழனிச்சாமி

சனி, 30 மார்ச் 2019 (16:48 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவனுக்குரிய பண்பும், தகுதியும் கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளார். 

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தாழை ம.சரவணனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
அப்போது அவர் திமுக தலைவர்  ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியதாவது:
 
சிறிய போராட்டம் நடந்தால் கூட எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் கூறி வருகிறார் அப்படி என்றால் நான் நூறு முறை பதவி விலகி இருக்க வேண்டும்.
 
தங்களது குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற பதவி வகிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
 
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக தான்.
 
முதல்வர் பதவிக்காக ஸ்டாலின் வெறிநாயை போன்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றி வருகிறார் . இவ்வாறு ஸ்டாலின் குறித்து மிக கடுமையான முறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்