மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை - கருணாநிதி

சனி, 28 பிப்ரவரி 2015 (16:05 IST)
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்று கூறினார்.
 
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
 
விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஆண்டுதோறும் இங்கே ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
 
வரவிருக்கிற காலங்களில் பல்வேறு சோதனைகளைக் கடந்து செல்வது எப்படி?, எவ்வாறு யாருடன் துணை வைத்து கொள்வது என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த விழா நடைபெறுவதாகக் கருதுகிறேன்.
 
எனக்கு முன்னால் பேசியவர்கள் நான் 6 ஆவது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்று கூறினார்கள். அந்த ஆசை எனக்கு இல்லை.
 
எனது ஆசை யெல்லாம் திமுகவை கட்டி காக்க வேண்டும் என்பதுதான். கடைசி தொண்டன் உள்ளவரை இந்த கழகத்தை எதிரிக்கு விட்டு கொடுக்க முடியாது" இவ்வாறு கருணாநிதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்