கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், இப்போது விண்ணப்பித்தால், தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
"மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் இந்த உதவி வழங்கப்படும். இதுவரை 1.14 கோடி மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேராதவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பித்தால், அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்."
மேலும், "ஜூன் மாதம் 4-வது கட்டமாக 9000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க உதவும். இதன் மூலம், தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.