மார்ச் 9ஆம் தேதி காலை 5:10 முதல் மாலை 4:10 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, வரும் ஞாயிறு அன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதை அடுத்து பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.