சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை! – 3 பேர் கைது!

புதன், 25 மே 2022 (11:09 IST)
சென்னையில் பாஜக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் 3 ரவுடிகளை தற்போது கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி பாலசந்தர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ரவுடிகளான பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் மற்றும் ரவுடி கலைவாணன் உள்ளிட்ட 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.மேலும் தப்பி சென்ற 3 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்