சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:03 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
 
நேற்று இரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது 
 
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இருப்பினும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்