7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை: வானிலை எச்சரிக்கை

திங்கள், 21 நவம்பர் 2022 (11:29 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
 வங்கக் கடலில் தோன்றியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.
 
ந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சேலம், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது 
இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்