சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற வழக்கு: அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

சனி, 24 ஜூன் 2023 (16:55 IST)
சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவில், ‘இல்லத்தரசியின் வேலையை எதனுடனும் ஒப்பிட முடியாது என்றும், கணவனின் 8 மணி நேர உத்தியோகத்துடன் இல்லத்தரசியின் வேலையை ஒப்பிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது
 
குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை என்றும், எனவே சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என கணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பியதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற கணவரின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்