44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:51 IST)
44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது என்பதும் இதுகுறித்து அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என திருமாவளவன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவை பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் திருப்பூர் கன்னியாகுமரி பல்லடம் ஆகிய பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம் என சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்