கனமழை எதிரொலி: சென்னையில் 6 சுரங்கப்பாதை மூடப்பட்டது

திங்கள், 8 நவம்பர் 2021 (07:43 IST)
கனமழை எதிரொலி: சென்னையில் 6 சுரங்கப்பாதை மூடப்பட்டது
சென்னையில் கனமழை காரணமாக 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான திருவொற்றியூர் காசிமேடு ராயபுரம் தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை பெரம்பூர் புளியந்தோப்பு வியாசர்பாடி கொடுங்கையூர் திருவிக நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆறு சுரங்கப்பாதைகள் மழை காரணமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் சுரங்கப்பாதைகள் தேங்கி உள்ளன. இதை அடுத்து கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்