நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:42 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அனுசியா என்ற மாணவி கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததிலிருந்து சோகமாக இருந்துள்ளார். நீட் தேர்வில் தனக்கு மிகவும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும் அதனால் தனது மருத்துவ கனவு தகர்ந்து விடும் என்றும் அவர் பெற்றோரிடம் புலம்பிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் இன்று திடீரென அவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 40 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே தனுஷ் என்ற மாணவர் மற்றும் கனிமொழி, சௌந்தர்யா ஆகிய இரண்டு மாணவிகள் நீட்தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்