செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு!

வியாழன், 26 நவம்பர் 2020 (11:42 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்த மழை காரணமாகவும் நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாகவும் சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவை நேற்று முன்தினம் எட்டியது. 
 
இதனை அடுத்து நேற்று நண்பகல் 12 மணிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. அதன்பின் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் நீரின் அளவு உயர்த்தப்பட்டது.
 
நேற்று இரவு ஒரு கட்டத்தில் 9 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது என்பதும் இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது மழையும் குறைந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. 
 
இதனை அடுத்து படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 1500 கன அடியாக குறைக்கப்பட்டு தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
செம்பாரம்பாக்கம் நீர்வரத்து 4,371 கன அடியில் இருந்து 1,700 கன அடியாக குறைந்ததால் நீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்