மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மேலும் பட்டா இடங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன.
அதன்படி, பிஆர்பி நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி உள்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலூர் நீதிமன்றத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.