325 கோடி செலவில் மூன்று மருத்துவக்கல்லூரிகள்! – மத்திய அரசு அனுமதி!

புதன், 27 நவம்பர் 2019 (13:12 IST)
தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 30 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் உடன் இணைந்த மருத்துவமனைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் 33 ஆக அதிகரிக்கும்.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் 325 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்களும் அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்