அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்தன: மூன்று பேர் பலி

திங்கள், 10 ஜூன் 2019 (11:18 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்கு அடுத்துள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசு பேருந்துகள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியே சூளகிரி என்ற பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  அந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றுமொரு அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதியது. பின்பு அந்த பேருந்தும் விபத்திற்குள்ளானது.

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த பேருந்து விபத்தில்,  ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் பத்து பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்