ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ! போலீஸார் சோதனை

செவ்வாய், 15 ஜூன் 2021 (16:31 IST)
மதுரை ரயில் நிலையத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்ட்ல விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு போலீஸார் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு ஒரு மெசேஜ் மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸார் மெட்டல் டிடெக்டர் மோப்ப நாய்களுடன் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.  

இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்