பேராசிரியர் செய்த அத்துமீறல் – பினாயில் குடித்து மாணவி தற்கொலை முயற்சி !

திங்கள், 18 நவம்பர் 2019 (08:36 IST)
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜெனிபர் என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று மதியம் பினாயில் குடித்து  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த  சகமாணவிகள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலிஸார் நடத்திய விசாரணையில் மாணவியின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த விசாரணையில் கடந்த மாதம் நடந்த தேர்வு ஒன்றுக்கான வினாத்தாள் கசிந்து மாணவர்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்ததாகவும் அதனால் அது சம்மந்தமாக உண்மையைத் தெரிந்துகொள்ள துறைத்தலைவர் மாணவர் மாணவிகளின் செல்போன்களை சோதனை செய்துள்ளார். அப்போது மாணவிகள் சிலர் தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பி மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவற்றை வைத்து மோசமாக விமர்சனம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த மாணவி ஜெனிபர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் கல்லூரி வட்டாரரத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் இதில் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்