ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: முதலமைச்சர் மோடிக்கு பரிந்துரை

ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (15:03 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுக்க உள்ளார்.


 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை பிரதமரை டெல்லியில் சந்திக்கிறார். அப்போது தமிழ்நாட்டில் ‘வர்தா’ புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா” விருது அளிக்க வேண்டியும், முழு திருவுருவ வெங்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்