மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (14:25 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்