காதலி பேசாததால் இளைஞர் விபரீத செயல்!

சனி, 16 ஜூலை 2022 (13:50 IST)
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஒரு உயர் மின் அழுத்த கோபுரத்தில் கஞ்சா போதையில் ஏறிய  இளைஞர் கிஷோர்(19), தன்னுடன் காதலி சில நாட்களாகவே பேசவில்லை. அதனால், தற்கொலை செய்யப் போகிறேன் எனக் கூறி மிரட்டல் விடுத்தார்.

இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸ, கிஷோர் காதலிக்கும் பெண்ணுக்குப் போன் போட்டு,  அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்துப் பேச வைத்தனர்.

அதன்பின்னர், கிஷோரை கீழிறக்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்