கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜவேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியர் என கருதக்கூடாது. எனவே ஜெயலலிதாவிடம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.