ஜெயலலிதா இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு விசாரணை மனு தள்ளுபடி!

புதன், 14 டிசம்பர் 2016 (16:10 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.


 
 
கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜவேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியர் என கருதக்கூடாது. எனவே ஜெயலலிதாவிடம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது ஜெயலலிதா தற்போது இறந்துவிட்டதால் இந்த மனு காலாவதியாகி விட்டது என கூறி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்