துப்பாக்கிகளை வைத்து ஆயுதபூஜை செய்த அர்ஜூன் சம்பத்!
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (09:34 IST)
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊடகங்களில் அதிரடியாக பேசுபவர் அர்ஜூன் சம்பத். இவர் தனது வீட்டில் துப்பாக்கிகளை வைத்து ஆயுதபூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார். இதனால் சமூக வலை தளங்களில் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.