தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே மோனோ ரயில், மெட்ரோ ரயில் தொடர்பாக கடும் வாதம் நடைபெற்றது.
திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கி நடந்து வருவதால் பாதியில் நிறுத்த முடியாது என்றார். மேலும் ஒரு திட்டத்தை தொடங்குவது, முடிப்பதில் யார் வல்லவர்கள் என்பதை வீராணம் திட்டம் ஒன்று போதும் எனவும் கூறினார்.