மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:05 IST)
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடக்கவிருந்த அண்ணா செமஸ்ற்ற் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவைக் கரையைக் கடக்க உள்ளது.

மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென் கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், இன்று மாலை முதல் அனளை அதிகாலை வரை 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மாண்டஸ் புயலின் வெளிப்புற சுற்று மேகங்கள் நிலப்பரப்பிற்குள் வரத் தொடங்கியுள்ளதாகவும், இதனால், சென்னைம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்
 
இந்த நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாளை ( 10-12-22) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்