சீமான் மீது தேசத் துரோக வழக்கு: தலைத்தூக்கும் சிஏஏ!

சனி, 9 மே 2020 (13:34 IST)
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 22 ஆம் தெதி கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
போராட்டத்தின் போது அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும்வகையில் பேசியதாகவும், தேச ஒற்றுமையை குழப்பும் வகையில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்