ரஜினி வீட்டு வாசல பாத்து நாங்க ஒன்னும் இல்லை... உச்சகட்ட கடுப்பில் அமமுக அண்ட் கோ!!

திங்கள், 10 பிப்ரவரி 2020 (11:36 IST)
ரஜினியோடு கூட்டணி வைக்க அவர் வீட்டு வாசலில் நாங்கள் ஒன்னும் காத்திருக்கவில்லை என அமமுக  செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார். 
 
மேலும், பாமக இவருடன் கூட்டணி வைக்கும் என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டுமா?வேண்டாமா என்பது குறித்து ரஜினிதான் அறிவிப்பார். ஆனால், அமமுகவுடன் கூட்டணி வைக்க ரஜினி விரும்பவில்லை என்றும் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். தமிழருவி மணியனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
AMMK Vetrivel
இந்நிலையில் இந்த பேட்டியால் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ளது அமமுக தரப்பு. இதன் வெளிபாடாக அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, ரஜினியின் அரசியல் குறித்து பேச தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் உள்ளது. இவர் என்ன ரஜினியின் செய்தி தொடர்பாளரா? 
 
தமிழருவி மணியன் நல்லவராக இருக்கலாம். ஆனால் அதற்காக எதுக்கெடுத்தாலும் கருத்து சொல்லக்கூடாது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று இவர் எவ்வாறு கூறலாம்? ரஜினியோடு கூட்டணி வைக்க அவர் வீட்டு வாசலில் நாங்கள் ஒன்னும் காத்திருக்கவில்லை.
 
கூட்டணி குறித்து ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அமமுக தலைமை முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் இடைத்தரகர் தமிழருவிமணியன் பேசக்கூடாது என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்