முன்ஜாமீன் கிடைத்தவுடன் ஜெய்ஸ்ரீராம் என பதிவு செய்த அமர்பிரசாத் ரெட்டி..!

Mahendran

புதன், 7 பிப்ரவரி 2024 (17:56 IST)
பெண்ணை தாக்கிய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்த நிலையில் சில நிமிடங்களில் அவர் தனது சமூக வலைதளத்தில் ஜெய் ஸ்ரீராம் என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மாவட்ட துணை தலைவி ஆண்டாள் என்பவரை அமர்பிரசாத் ரெட்டி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டிக்கு  நிபந்தனை ஜாமீன் மீது அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமர்பிரசாத் ரெட்டி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 10 நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்றும் தவறினால் முன்ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முன் ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் அமர்பிரசாத் ரெட்டி தனது சமூக வலைதளத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்