1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல்..!

வெள்ளி, 26 மே 2023 (15:34 IST)
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் காலத்தில் மட்டுமே அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தாலும் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளதாக உள்ள அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்