அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றப்படுகிறதா?

செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டும் அதே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது
 
எனவே முழு ஊரடங்கு நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது என்பதால் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்