ஆனால், அப்படி வெளியான செய்திகள் வதந்தி என்றும், முதல்வருக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
முதல்வருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவரான கிலானி தலைமையிலான மருத்துவர் குழுவினர்தான் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, முதல்வரின் உடல் நிலை குறித்து கிலானி அளிக்கும் தகவல்தான் முக்கியமானது. அவர் இன்னும் எந்த முடிவும் கூறவில்லை எனவும், அதனாலேயே, ஜெ. உடல் நிலை குறித்து வெளியான செய்திகள் வதந்தி என அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.