திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் ராஜி (60) கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டில் ஏசி வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி(51), இளையமகன் கவுதமன் ஆகியோர் பரிதாபமாக இறந்ததாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து அவர் போலிஸாரிடம் கூறியதாவது :
சிறுவயதில் இருந்தே என் பெற்றோர் தம்பி கவுதம் மீதே அதிகம் பாசம் வைத்திருந்தனர். அவனுக்கு பிரமாண்டமாகத் திருமணம் செய்யவும் திட்டமிட்டனர் . இதனால்நான் ஆத்திரம் கொண்டேன். சொத்துக்களையும் தம்பிக்கே எழுதிவைக்க முடிவு செய்தததால் பெற்றோர்க்கு என்மீது பாசம் இல்லை என எண்ணினேன். அதனால் கடந்த 14 ஆம்தேதி இரவு பெற்றோர் , தம்பி ஒரே அறையில் தூங்கியதால் பெட்ரோலை நிரப்பி துணியால் திரி செய்து வைத்திருந்தேன்.பின்னர் பெட்ரோல் ஊற்றிவைத்திருந்த பீர்பாட்டிலில் தீ பற்றவைத்து அறையில் வீசினேன்.அவர்கள் வெளியில் ஒடிவராமல் இருக்க வெளியில் கதவை தாழிட்டேன். ஆனால் அப்பா ராஜி மட்டும் தீக்காயக்களுடன் பின் பக்க கதவு வழியாக தப்பித்துவந்தார். காப்பாற்றுங்கள் என்று கத்தினார். இதில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டினேன். பின்னர் ஏசி வெடித்ததாக நாடகம் ஆடினேன். இவ்வாறு தெரிவித்தார்.