தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். இவரது இந்த கருத்து சில எதிர்ப்புகளும் கிளம்பியது. முதல்வர் ஒரு பெண் அவரது புகைப்படத்தை வெளியிட சொல்வது தவறு, அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது எனவும் பேசப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் அந்த அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, இதுபோல முரசொலி மாறன் மருத்துமனையில் இருக்கும்போது எந்த புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்று காரியங்களில் ஈடுபடுகிறார் என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.